SRI KALA BAIRAVJI

SRI KALA BAIRAVJI
BHAIRAV KALYAN

Tuesday, August 30, 2011

KALABHAIRAVAR


                   ஸ்ரீ காலபைரவர் திருக்குருங்குடியாகிய   வைஷ்ணவ திவ்ய தேசத்தில் துவி ஜத்ஹோடும் வர்ண கலாப திருமேநியோடும் ஷேத்திர பலகாரக அருள் புரிகிறார். வலது கையில் சூலம், இடது கையில் இங்கு என்ன விஷேசம் என்றால் ஸ்ரீ பைரவரவருக்கு  கபாலமும் கொண்டுள்ளார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. அதனால் கருவறையில் திறப்பு கிடையாது . காற்று வருவதற்கு வழி இல்லை. வாசல் வழியாகத்தான் காற்று வரவேண்டும். முகத்தின்  நேரே ஒரு விளக்கும், இடுப்புக்கு அருகில் சில விளக்குகளும் போடப்பட்டுள்ளது. ஆனால் முகத்தின் நேரே உள்ள விளக்கு அவருடைய சுவாசத்தால் அசைந்து கொண்டே இருக்கும். கீழே உள்ள விளக்கு எதுவும் அசையாது. காட்சியை நீங்களும் கண்டு பகவானின் திருவுள்ளத்திற்கு பத்திரமகுமாறு  பிரார்த்திக்கிறேன். பகவானுக்கு உகந்த தினம் தேய் பிறை அஷ்டமி.






வழிபாட்டு விபரங்கள்

தேய் பிறை அஷ்டமி அன்று பகவானுக்கு நீரன்ஜனம் போடலாம்.( நீரன்ஜனம் = தாம்பாளத்தில் பச்சை அரிசி பூட்டு அதில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு போடவேண்டும். காரிய சித்தி ஆனவுடன் பூச்சட்டையும் வடையும் பிரசாதமாக படைக்கப்படும்.


பேருந்து மார்க்கம்
கோவில் வருவதற்கு திருநெல்வேலியில் இருந்து பஸ்கள் ஏறுவடி மார்கமாக இயக்கபடுகின்றன. திருநெல்வேலியில் இருந்து பஸ் நம்பர்கள் 565 நாகர்கோயில் வழி ஏறுவடி செல்லும். நாகர்கோயிலில் இருந்து தென்காசி, பாபநாசம் செல்லலும் பஸ்கள் திருக்குறுங்குடி வழியாக செல்லும்.
பகவானுடைய போடோக்கள் இந்த லிங்கில் இருந்து எடுத்துகொள்ளலாம்.

இப்படிக்கு
ஸ்ரீ பைரவதாசன்
திரு . வி. க.
செல்: 9443554528 /8056747393  (¨பைரவ தாசன்).

மற்றும் நீங்கள் விரும்பினால் இங்கு நடக்கவிருக்கும் உத்சவ பஞ்சாங்கம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்க: 8056747393
நன்றி!

Thursday, February 10, 2011

thirukkrungudi

பக்கம் நின்றார் உடன் திருக்குறுங்குடி பெருமாள்

ஸ்ரீ திருக்குறுங்குடி திவ்ய தேசம் 1௦8 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 58-வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் சிவனும் விஷ்ணுவும் சரி சமமாக பாவிக்கப்பட்டு வழிபாடுகளும் நடதப்படுகின்றன.  இங்கு அதிகாலை இருவருக்கும் விஸ்வருபமும், இரவு திருவிசாகமும்  ஒன்றுபோல் நடத்தப்படுகிறது. இந்த திவ்ய தேசம் ஸ்ரீ ஸ்ரீ பேரருலாளர் ராமானுஜ ஜீயர் அவர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வருகின்றது.



இந்த திவ்ய தேசம் வாமன ஷேத்ரம், இங்கு தான் மகாபலிசக்கரவர்த்தி மோட்சம் அடைந்ததது மற்றும் இங்கு ஸ்ரீ விஷ்ணு ராமானுஜரிடம் இருந்து மந்தரோபதேசம் பெற்று வைஷ்ணவ நம்பி என்ற தாஸ்ய  நாமத்துடனும், சிவன் பக்கம் நின்றார் என்ற தாஸ்ய  நாமத்துடனும் அருள் பாலிக்கின்றனர்.

இந்த திவ்ய தேசத்தில் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வர்முதலிய ஆச்சர்யர்கள் மங்களாசாசனம் பன்னயுள்ளனர்.

இங்கு பிரதி வருடம் பங்குனி மாதம் ப்ரம்மஉதச்தவம் , பத்ர தீபம் மற்றும் தேபோத்சவம் திருவிழாக்கள் தவறாது நடை பெற்று வருகின்றது. ப்ரம்மஉதச்தவம் 5ம் திருநாளன்று 5 நம்பி பெருமாள் திருவீதி உலா கண்கொள்ள கட்சியாகும்.

உங்கள் எல்லோரையம் வரவேற்பதில் பெருமிதம் கொண்டு, இங்கு தவறாது வந்து சுவாமியின் அருட்கடட்சதை பெற வேண்டும் உள்ளம்,

கோவில் வருவதற்கு திருநெல்வேலியில் இருந்து பஸ்கள் ஏறுவடி மார்கமாக இயக்கபடுகின்றன. திருநெல்வேலியில் இருந்து பஸ் நம்பர்கள் 564 நாகர்கோயில் வழி ஏறுவடி செல்லும். நாகர்கோயிலில் இருந்து தென்காசி, பாபநாசம் செல்லலும் பஸ்கள் திருக்குறுங்குடி வழியாக செல்லும்.

திரு வி. க.
திருக்குருங்கை
மேலும் விபரங்களுக்கு  8056747393 / 9790383548 (PP)